கோவை தொண்டாமுத்தூரில் கொட்டும் மழையில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்..!

பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என கூறி கொட்டும் மழையில் அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூரில் அரசு பேருந்தை சிறைபிடித்து கொட்டும் மழையில்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.



கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லைஎன கூறி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.

மேலும், சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபடுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், தென்னமநல்லூருக்கு வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்து சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாக கூறினர்.

இதனால் பள்ளி பேருந்துகள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் பாதிப்படைந்தனர். இதனிடையே தொண்டாமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடந்த வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...